புதன், 20 ஏப்ரல், 2011

செய்வீர்களா?வருங்கால முதல்வருக்கு ஒரு திறந்த மடல் :ஆர்.நடராஜன்

ஐயா, அம்மணி, உங்களில் யாரோ முதல்வராக வரப்போகிறீர்கள். உங்களுக்கும் இப்போது அது சஸ்பென்ஸ். உங்கள் உறக்கத்தைக் கெடுத்துள்ள ஓட்டுப் பெட்டிகள் உறக்கத்தில் இருக்கின்றன. அவை எழுந்ததும், நீங்கள் யார் என்பது எங்களுக்கு தெரிந்துவிடும். மக்கள் எஜமானர்கள், நீங்கள் வேலைக்காரர்கள் என்கிறீர்களே... அது உண்மை, எங்கள் காதில் சுற்றிய பூ இல்லை என்பதை நம்பி, நாங்கள் எழுதும் திறந்த மடல் இது.


உங்கள் எதிர்பார்ப்புகள் இருக்கட்டும், எங்கள் எதிர்பார்ப்புகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா, அதற்காகவே இந்த கடிதம்.நீங்கள் பதவியேற்கும் முன்பே ஆரவாரம் தொடங்கும்; ஆடம்பரம் தொடரும். அதை நினைத்தால் பயமாக இருக்கிறது. ஐயாவே, அம்மணியே, நீங்கள் இப்போதே உங்கள் தொண்டர் படைக்குச் சொல்லி வைத்துவிட்டால், ஆரவாரமில்லாமல், உங்கள் வெற்றியை கொண்டாடலாம். அமைதிக்கு கவுரவம் உண்டு என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களை மட்டும் குறை சொல்லக்கூடாது... நாங்களே வெறும் கைதட்டிக் கூட்டம்... காக்காய் பிடிக்கும் கும்பல். புண்ணாக்கு சங்கம், பருத்திக்கொட்டை சங்கம், குதிரைக் குஞ்சு சங்கம், கோழிக்குட்டி சங்கம் என்று பல சங்கங்கள் வைத்திருக்கிறோம். இதுதான் எங்கள் சங்க காலம். ஒவ்வொரு சங்கமும் பத்திரிகைகளில், "போற்றி, போற்றி' என்று போட்டி போட்டு உங்களை புகழ்ந்து விளம்பரங்கள் வெளியிடும்.அப்படி செய்யாதீர்கள் என்று நூற்றுக்கணக்கான சங்க நிர்வாகிகளை வேண்டிக்கொள்வீர்களா? நீங்கள் தீர்மானித்து விட்டால், இந்த விளம்பரங்கள் வராது. இப்படிப்பட்ட விழாக்களில் கலந்துகொண்டு நானும் உங்களைப் போல் கலப்பைக்காரன், கரண்டிக்காரி, சட்டிக்காரன், முட்டைக்காரி என்று சொல்வதைத் தவிர்ப்பீர்களா?


நீங்கள் இந்த மாதிரி சில குழுக்களுக்காக மட்டுமல்ல, எல்லாருக்குமே முதல்வர் என்பதை முழுமையாக புரிந்து கொள்வீர்களா? உங்களுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நீங்களே முதல்வர்; சரிதானே.இந்த புதிய ஆட்சிக் காலத்தில் நீங்களோ, உங்கள் அமைச்சர் பெருமகன்களோ, பெருமாட்டிகளோ செல்லும் வழி நெடுக, கட்-அவுட்கள், படத்தட்டிகள், கொடிகள் வைப்பதைத் தடுப்பீர்களா? எந்த ஆரவாரமும் எவருக்கும் கவுரவம் சேர்ப்பதில்லை என்பதை கட்சித் தலைவர், கட்சித் தலைவி என்ற முறையில் புரிந்து கொள்வீர்களா?அரசுத் திட்டங்களின் அறிமுகமா? புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுவதா? பாலமோ, கழிப்பறையோ திறப்பதா? அங்கெல்லாம் முதல்வர் தன் பரிவாரத்துடன் சென்று விழா நடத்தும் சடங்குகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்களா? விழாக்கள் மூலம் கிடைக்கும் விளம்பரம் வேறு வழிகளிலும் கிடைக்கும்; அதை நாடுங்களேன்.மறுபடியும் நீங்கள் ஆட்சிக்கு வர இருக்கும் நேரத்தில், உங்கள் தேர்தல் அறிக்கை, இலவசங்கள், சலுகைகள், மானியங்கள் பற்றி எதுவும் சொல்லாமல், இருக்கும் அளவுக்கு அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டுமே. அவர்கள் என்றென்றும் கையேந்திகளாக இருந்தால் நீங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சுயமரியாதைக் கொள்கைக்கு அது பொருத்தமாக இல்லையே. அதை உடனடியாக செய்துவிட முடியாது. ஆனால், ஆடம்பரங்களைக் குறைத்துக் கொண்டால், உருப்படியான திட்டங்களுக்கு பணம் செலவிடப்படலாம். இனி, இலவசங்கள் தேவைப்படாது என்ற நிலை உருவாக்கப் பாடுபடுவீர்களா?மக்களுக்கு கிரைண்டர், மிக்சி, பேன் தரும்போது, இதை முதலமைச்சராக உள்ள நான் தரவில்லை. அரசாங்கம் மூலம் இதை நீங்கள் இவற்றைப் பெறுவதற்குக் காரணம், வரி செலுத்தும் உங்கள் சகோதரர்களே என்ற உண்மையை பகிரங்கமாக சொல்லி, உங்கள் சுயமோகத்தை விரட்டிவிட்டு சகோதரத்துவத்தை வளர்ப்பீர்களா?கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திவிட்டு, கோட்டை பக்கம் வரவிடாமல் தடுப்பீர்களா?


கோட்டையில் அதிகாரிகளும், அமைச்சர்களும் பொது நலன்களுக்காக அல்லாத உரிய வேலைகளுக்காக வரும் மக்களே தென்பட வேண்டும், கரை வேட்டிகள் அல்ல. இதற்கான கறாரான ஏற்பாடுகளை செய்வீர்களா?காவல்துறையை ஏவல் துறையாக மாற்றாமல் இருப்பீர்களா?உங்கள் பி.ஏ.,க்கள், அமைச்சர்களின் பி.ஏ.,க் கள் ஒவ்வொருவரும் ஒரு குட்டி சமஸ்தானமாக மாறிவிடாமல் இருக்க, அவர்களைக் கண்காணிப்பீர்களா? நீங்கள் சரியாக இருந்தால் அவர்களும் சரியாக இருப்பார்கள் அல்லவா?அறைக்கு வெளியே இரு பக்கங்களிலும் பெரிய, மிகப்பெரிய "டிவி' அளவுக்கு இரண்டு கம்ப்யூட்டர் மானிட்டர்கள் பொருத்தி, ஒன்றில் உங்களை அறையில் சந்திக்க வருகிறவர்கள் யார் என்ற தகவலையும், மறு திரையில் உங்கள் வசம் முடிவுக்காக காத்திருக்கும் கோப்புகள் எவை என்பதையும் தெரிவிப்பீர்களா? அதுதானே ஒளிவு மறைவு இல்லாத நிர்வாகம். செய்வீர்களா?உங்கள் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்களா?அலுவலகத்தில் இருக்கும்போது, அலுவலக வேலையை மட்டுமே பாருங்கள்; வீட்டில் நீங்கள் குடிமக்கள் என்ற தினசரி நடைமுறையை வகுத்துக் கொள்ளுங்கள்; அதை அப்படியே செய்துவிட முடியாது. மாநிலத்தில் எங்காவது நெருக்கடி என்றால், நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் எங்களது, 24 மணி நேர ஊழியர். அப்படி ஊழியம் செய்ய கூப்பிட்ட குரலுக்கு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும். அவர்கள் வரட்டும், அருகில் இருக்கட்டும். மற்றபடி கட்சிக்காரர்களை கட்சி அலுவலகத்துடன் நிறுத்திக் கொள்ளலாமே... செய்வீர்களா?


ஆட்சியிலும், கட்சியிலும் ஆடம்பரத்தையும், ஆரவாரத்தையும் அறவே ஒழிப்பீர்களா? பதவியேற்று மூன்று அல்லது ஆறு மாதம் கடந்த பிறகு வளர்ந்த நாடுகளுக்கு சென்று வாருங்கள். அங்கே அரசு சட்ட திட்டங்கள்படி நடைபெறுகிறதா, கட்-அவுட்களின்படி நடந்து வருகிறதா என்று பார்த்து வாருங்கள். அந்த ஒழுங்கு முறையை சாலைகளிலும், அரசு அலுவலகங்களிலும் கொண்டு வாருங்கள். அதுதான் முன்னேற்றத்தின் முதல்படி. உங்கள் வெளிநாட்டுப் பயணங்கள் வேறு காரணங்களுக்காக அமைய வேண்டாம். கமிஷன் என்றால், கமிஷனும் வரும். புரிகிறதா? மக்களுக்கு இப்போது அதிக விவரம் தெரிந்து விட்டது.வீட்டில் இல்லாத ஒழுக்கம் வீதியில் வராது. வீதியில் இல்லாத ஒழுக்கம் சமூகத்தில் வராது. சமூகத்தில் இல்லாத ஒழுக்கம் அரசாங்கத்தில் வராது. இப்போது சீர்திருத்தத்தை உங்களிடமிருந்துதான் தொடங்க வேண்டும். வருங்கால முதல்வரே, நீங்கள் யாராக இருந்தாலும் சரி... மக்கள் இனி புதிய தொடக்கத்தை எதிர்பார்க்கலாமா? எங்களால் ஏற முடியவில்லை; முடங்கிப் போய்விட்டோம். நீங்கள் இறங்கி வருவீர்களா, எங்களை ஏற்றிவிட?


ஆர்.நடராஜன், அமெரிக்க தூதரக முன்னாள் அரசியல் ஆலோசகர்.

ஞாயிறு, 4 ஜூலை, 2010

மக்களின் தேசம் ! - வி.உஷா - சிறுகதை: நன்றி:- தினமலர்

அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன்.
நெஞ்சம் கனத்தது.
மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல... வரிசையாக நான்கைந்து தெருக்கள். அரசு, நெட்டி, கொன்றை என்று, வலுவான அடர் மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்து வருவது, மாலை வேளைகளில் எனக்கு மகத்தான அனுபவம். பறவைகளின் உற்சாகக் கூவல்களும், கூடு வந்தடையும் தாய்ப் பறவைகளும், காற்றின் தாளத்திற்கு நாட்டிய மாடும் கிளைகளும் இலைகளுமாக, ஒரு புது உலகத்திற்கு வந்ததைப் போலிருக்கும்.
அதிலும், அந்த கடைசித் தெரு இன்னும் சிறப்பானது. அடர்ந்த, கரும்பச்சையான பூவரச மரங்களின் ஊடாக, ஏழை மக்களின் குடிசை களும், அவற்றை ஒட்டி ஓடும் கிளியாறும், அந்தக் குழந்தைகளின் விளையாட்டு குதூகலங் களுமாக, மனது, கடின உழைப்பிற்குப் பிறகான நல்லதொரு இதமான மனநிலையைக் கொடுக் கும்.
இன்று, அவை எல்லாமே பாழாகிக் கொண்டிருந்தன!
மரங்கள் வெட்டப்பட்டு, சாலையின் குறுக்கே கிடந்தன. அவற்றிலிருந்து வெளிப் பட்ட பச்சை வாசனை, ஏதோ மாமிச மார்க்கெட்டுக்குள் நுழைந்ததைப் போலி ருந்தது. இலைகளும், கிளைகளும் மவுன மொழியில் ஓவென்று கதறியழுவதைக் கேட்க முடிந்தது. அடுத்த அதிர்ச்சியாக, குடிசைகள் புல்டோசரால் இடிக்கப்பட்டு, அலுமினிய பாத்திரங்கள், துணிகள், கெரசின் டின், அடுப்பு என்று, அந்தக் குடித்தனங்கள் அலறிக் கொண்டிருந்தன. நடு வீதிக்கு வந்திருந்தன.
"பறக்கும் ரயில் வரப்போகுதாம். இந்த வழியாத்தான், டபுள் ட்ராக் போகுதாம். கவர்மென்ட் உத்தரவு!' என்று சொன்னார்கள்.
மானுடத்தின் விடிவிற்காக வந்த மரங்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. தினக்கூலி நாற்பதோ, அறுபதோ பெற்று, அன்றாட உழைப்பாளியாக, வாழ்வின் விளிம்பு நிலையில் நிற்கும் மனிதர்களை, இன்னும் 30 கி.மீ., தள்ளி குடியமர்த்த நினைக்கும் அரசின் திட்டத்தை கேட்க சகிக்கவில்லை.
பாறையாக கனத்துப்போன நெஞ்சுடன் வீடு வந்து சேர்ந்தபோது, அப்பா கூடலூரிலிருந்து வந்திருந்தார்.
தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
லாப்டாப்பில், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பற்றி எதையோ ஆராய்ந்து கொண்டிருந்த தீபக்கிடம், காபியை நீட்டினேன்.
""அப்பா போன் பண்ணினாரா?''
""ஆமாம்மா... காம்ப் நாளைக்கு முடிஞ்சு, நாளை நைட் புறப்படறாராம்...''
""சாப்பிட்டியாப்பா?''
""யெஸ்மா... மாங்காய் பருப்பும், காரட் சாலட்டும் பிரமாதம்... தாத்தா வந்தாச்சு... பாத்தியா?'' என்றான்.
""பாத்தேன். முகம் சரியா இல்லே... பயணக் களைப்பா இருக்கும்... உனக்கு மெயில் வந்துதா? ஐ.ஐ.எம்., ஆமதாபாத் என்ன சொல்றான்?'' என்று, டம்ளரை வாங்கிக் கொண்டேன்.
""ஆமதாபாத், கோல்கட்டா, பெங்களூரு மூணுமே, மெயில் மேல மெயில் அனுப்பிட்டுதான் இருக்கும்மா... எனக்குதான் கொஞ்சம் குழப்பம்...''
""குழப்பமா... ஏன்? என்ன குழப்பம்?'' என்று அப்பா வந்தார்.
""ஐ.ஐ.டி.,ல டாப் டென்ல இவன் ஒருத்தன்பா... இவன் கேட்கிற குரூப்புக்கு, லேப் பெசிலிட்டி, இந்த மூணுல எதுல நல்லா இருக்குன்னு பார்க்க வேண்டாமா? அதுசரி... டூர் எப்படி இருந்தது? சரியா சாப்பிடலையா? சித்தி எப்படி இருக்கா?'' என்று அவர் கையிலும் காபியை வைத்தேன்.
""தீபக்...'' என்றார் அழுத்தமாக அவனைப் பார்த்து.
""என்ன தாத்தா?''
""இந்த தேசமே வேண்டாம்ப்பா... ஐ.ஐ.எம்., - எம்.ஐ.டி.,ன்னு போட்டு குழப்பிக்காதே... உன் மார்க்குக்கு, ஸ்டான் போர்டே கிடைக்கும்பா... லண்டன், அமெரிக்கான்னு போயிடு... இது நாசமாப் போன சிஸ்டம்... வேண்டாம்பா...'' என்றார். சடாரென்று முகம் வெந்து, உதடுகள் துடித்தன.
""நானும் அப்படித்தான் நினைக்கிறேன்...'' என்றேன் கவலையுடன்.
""என்னம்மா சொல்றே?'' என்று அவன் குழப்பத்துடன் பார்த்தான்.
""மொதல்ல தாத்தா சொல்லட்டும்...''
""ஊட்டி...'' என்றார்; கண நேரத்தில் கண்கள் கலங்கி விட்டன.
அவரையே பார்த்தேன்... தீபக் எழுந்து வந்தான்.
""ஊட்டி, கூடலூர் எல்லைப் பகுதியில இருக்கிற வீட்டைப் பாக்கத்தான் போனேன். பூர்வீக வீடு; என் தாத்தா கட்டின வீடு. பாட்டி, கன்றும், மாடும் வெச்சு வளர்த்த வீடு. அப்பா அதை கோவில் மாதிரி பாதுகாத்தார். சர்ச் பக்கத்து ஏழைக் குழந்தைகளுக்கு, அந்த வீட்டுலதான் இலவசப் பாடம் எடுத்தார். அம்மா, ஏழைகளுக்காகவே பயிர் பண்ணி, சகாய விலைக்கு கொடுத்தாள். என் கைக்கு அந்த வீடு வந்தபோது, இலவச லைப்ரரியா மாத்தினேன்... தெரியுமில்லையா?'' என்றார்.
""தெரியாம என்ன தாத்தா?'' என்று தீபக் அவர் கையைப் பற்றினான். ""ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை, மன நிறைவோட போய் அந்த வீட்டைப் பாத்துட்டு வருவீங்களே... பத்து புஸ்தகமாவது புதுசா கொண்டு போய் சேர்ப்பீங்களே...''
""இனிமே எதுவும் இல்லடா தீபக்...'' என்று, அவன் கைகளில் முகம் பற்றி அழுது விட்டார்.
""ஆயிரம் அடி உயரத்துல இருந்து சரிந்த மண்ணும், பாறையும், வழியில் கிடைச்சதை எல்லாம் வழிச்சு எடுத்திருக்கு. நானூறு இடங்கள்ல நிலச்சரிவுகள். விடாமல் அடிச்ச பெருமழை மட்டுமா காரணம்? இல்லப்பா... மனிதன் செஞ்ச குற்றங்கள்... மழை, வெள்ளத்தை, எந்தத் தடையும் இல்லாம அதன் போக்குலயே விட்டிருந்தா பிரச்னை இல்லையே...
"" தண்ணி போகிற பாதை முழுக்க, எக்கச்சக்க வீடுகள், காட்டேஜ்கள், உணவு விடுதிகள், ஓட்டல்கள்ன்னு ஆக்கிரமிச்சிருக்கு. தடுப்புகள் இருக்கும்போது, தண்ணீர் எப்படி வழிந்து ஓடும்? தேங்கி மண்ணுக்குள் இறங்கும். மெல்ல சகதி ஆகிடும். மறுபடி, மறுபடி, தேங்கி, மண் அரிக்கப்பட்டு, பிடிமானம் இளகி நிலம் சரிஞ்சுது.
""காளான்களாக, கல்குவாரி முளைசிருக்கு. போதாதற்கு, சட்டத்திற்கு புறம்பா மலைகளை வெட்டித் தள்ளுறது, நீலகிரி முழுக்க நடக்குது. நம்ம வீடு, பூமிக்குள்ள புதைஞ்சு போச்சு சியாமளா...'' சிறுவனைப் போல விம்மல் தெறித்து அழுதார் அப்பா.
""சரிப்பா... ப்ளீஸ்... அழாதீங்க... நீங்க சொன்னது போல, மனிதத் தன்மை இல்லாம, ஏன், ஜீவகாருண்யம் இல்லாம, குறைஞ்சபட்ச சுற்றுச்சூழல் உணர்வு கூட இல்லாத இயந்திர உலகத்துல வாழ றோம்பா... வேற என்ன வழி இருக்கு நமக்கு, இதுல இருந்து தப்பிச்சு போகி றதுக்கு?'' என்று கரகரத்தேன்.
""தீபக்குக்கு இருக்கே... அவன் தப்பிக் கலாமே... இந்த நாடும் வேண்டாம்; ஜனங்களும் வேண்டாம்டா தீபக். நீ அமெரிக்கா போ... உன் திறமையும், புத்திசாலித் தனமும், இந்த தேசத்துக்கு பயன்படக் கூடாது. நன்றி கெட்ட மிருகங்கள். தீபக்! நீ கிளம்புப்பா...'' என்று அப்பா கர்ஜித்தார்.
ஊமை அழுகையாக மனது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது. ரோஜாவை அரைத்து குல்கந்து செய்யும் உலகம் இது என்று விம்மிக் கொண்டிருந்தது.
""என்னம்மா... நீயும் பாக்கலே, நானும் பாக்கலே... ஊட்டுல என் பொண்ணுதான் எண்ணிப் பாத்து சொல்லிச்சு... பாரு, ரெண்டு நோட்டு கூடுதலா கொடுத்திருக்கே...'' என்று தேவானை வந்து நீட்டினாள்.
காலையில் அவளுக்கு, ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தேன். எண்ணிக் கொடுக்கவில்லையா?
""சார்... நடேசன் சார்...'' என்று யாரோ அழைக்க, வாசலுக்கு சென்றாள்.
மெலிந்த உருவம். ஐம்பது வயது மதிக்கலாம் போன்றவர். முகத்தில் இவ்வளவு வலி ஏன் என்று தெரியவில்லை.
""என் பேர் வரதன்... பெரியவர் இருக்காரா?'' என்றார்.
""உட்காருங்கள். இதோ கூப்பிடறேன்...'' என்று, உள்ளே போய் அப்பாவிடம் சொன்னேன்.
""வரதனா... யாரது? அந்த பெயர் நினைவில் இல்லையே?'' என்றபடி அப்பா வந்தார்.
உட்கார்ந்திருந்தவரை ஒரு நிமிடம் பார்த்து, ஞாபகத்திற்கு கொண்டு வந்து விட்டார்.
""வாங்க... வாங்க... பெண்ணுக்கு ஆபரேஷன் முடிஞ்சுதா? நல்லா இருக்காளா?'' என்று புன்னகைத்தார்.
வந்தவர் முகத்தில் புன்னகை தோன்றவில்லை. தலை மெல்ல குனிந்து நிமிர்ந்தது; உதடுகள் ஒரு நிமிடம் துடித்தன.
சட்டைப் பைக்குள் கைவிட்டு, ஆயிரம் ரூபாய் தாளை எடுத்தார்.
""என் மகள் சாந்திக்கு, இதய ஆபரேஷன் செய்ய என்னிடம் பணமில்லை. உங்களை மாதிரி ஈர மனசுக்காரர்கள்கிட்ட மடிப்பிச்சை கேட்டு, லட்ச ரூபாய் சேர்த்து அவளை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனேன். போகிற வழியிலேயே அவள் போயிட்டாள் சார். இந்த பணத்திற்கு தேவையே இல்லாமல் போய் விட்டது. யார்கிட்டே, எவ்வளவு வாங்கினேன்னு, பேர், அட்ரசோட எழுதி வெச்சிருக்கேன். இது, நீங்க கொடுத்த ஆயிரம் ரூபாய் சார்... உங்க நல்ல மனசுக்கு நன்றி. அம்மா, பெரியவரை நல்லபடியா பாத்துக்குங்க... வரேன் சார்...''
கையெடுத்து கும்பிட்டார்.
அப்பாவும், நானும் விக்கித்து நின்றோம்.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
""ஆமதாபாத் பெஸ்ட்டுன்னு ரகு சொல்றாம்மா... அங்கயே படிக்கிறேன்...'' என்று தீபக் வந்து நின்றான்.
கதவைத் திறந்து, போனவரையே பார்த்துவிட்டு எங்கள் பக்கம் திரும்பினான்.
""எல்லா ஊர்கள்லயும், எல்லா தேசத்துலயும், நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு தாத்தா... நம்ம ஊர் சிஸ்டம், நியாயத்தின் பேர்லயும், தர்மத்தின் பேர்லயும் உண்டாக்கப்பட்டது தான். ஆனா, அதை கண்காணிக்க வேண்டிய மனிதர்கள் குறைபாட்டோட இருக்கிறதால, எல்லாம் பாழாகிட்டிருக்கு...
""ஆனால், எல்லாரும் அப்படி இல்லே தாத்தா... தர்மபுத்திரர்களும், பீஷ்மர்களும் உங்க வடிவுல, இதோ வந்துட்டுப் போறாரே இவர் வடிவுல வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க... அமெரிக்கா, லண்டன்ல மட்டும் குற்றங்கள், குறைகள் இல்லையா தாத்தா? வியட்னாம், கியூபா, ஈரான், ஈராக், ஆப்கன்னு, நாடு நாடா ஊடுருவி, ஆயுதங்கள், ஆயில்ன்னு அமெரிக்கா வம்புச் சண்டைக்கு அலையலையா?
""ஸ்கூல் பையன்கள்ல முக்கால்வாசி பேர், துப்பாக்கிகளோட அமெரிக்காவுல சுத்தறதில்லையா? வாட்டர்கேட் ஊழல், மோனிகா லெவன்ஸ்கின்னு வெள்ளை மாளிகை களங்கப்படலையா? லண்டன் அரண்மனை, எத்தனை நாடுகள்ல காலனி அமைச்சது? நம்மளையே, நானூறு வருஷம் அடிமைப்படுத்தி வெக்கலையா? தாத்தா... நம்பிக்கையோட இருக்கலாம்... நாம நல்லவர்களா இருப்போம் தாத்தா... சூழலையும் நல்லதா ஆக்குவோம்... காலப்போக்குல எல்லாமே கம்பீரமா நிமிர்ந்து நிற்கும் தாத்தா...''
தீபக்கை, அப்பா கண்ணீருடன் அணைத்து, சம்மதத்துடன் தலையாட்டினார்.
அந்தக் காட்சியை மறைத்து விடக்கூடாதே என்று, என் கண்ணின் ஈரத்தை வேகமாக துடைத்தேன் நான்.

சனி, 3 ஜூலை, 2010

மக்களின் தேசம் ! - வி.உஷா - சிறுகதை: நன்றி:- தினமலர்

அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன்.
நெஞ்சம் கனத்தது.
மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல... வரிசையாக நான்கைந்து தெருக்கள். அரசு, நெட்டி, கொன்றை என்று, வலுவான அடர் மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்து வருவது, மாலை வேளைகளில் எனக்கு மகத்தான அனுபவம். பறவைகளின் உற்சாகக் கூவல்களும், கூடுவந்தடையும் தாய்ப் பறவைகளும், காற்றின் தாளத்திற்கு நாட்டிய மாடும் கிளைகளும்இலைகளுமாக, ஒரு புது உலகத்திற்கு வந்ததைப் போலிருக்கும்.
அதிலும், அந்த கடைசித் தெரு இன்னும் சிறப்பானது. அடர்ந்த, கரும்பச்சையான பூவரசமரங்களின் ஊடாக, ஏழை மக்களின் குடிசை களும், அவற்றை ஒட்டி ஓடும் கிளியாறும், அந்தக்குழந்தைகளின் விளையாட்டு குதூகலங் களுமாக, மனது, கடின உழைப்பிற்குப் பிறகானநல்லதொரு இதமான மனநிலையைக் கொடுக் கும்.
இன்று, அவை எல்லாமே பாழாகிக் கொண்டிருந்தன!
மரங்கள் வெட்டப்பட்டு, சாலையின் குறுக்கே கிடந்தன. அவற்றிலிருந்து வெளிப் பட்ட பச்சைவாசனை, ஏதோ மாமிச மார்க்கெட்டுக்குள் நுழைந்ததைப் போலி ருந்தது. இலைகளும், கிளைகளும் மவுன மொழியில் ஓவென்று கதறியழுவதைக் கேட்க முடிந்தது. அடுத்தஅதிர்ச்சியாக, குடிசைகள் புல்டோசரால் இடிக்கப்பட்டு, அலுமினிய பாத்திரங்கள், துணிகள், கெரசின் டின், அடுப்பு என்று, அந்தக் குடித்தனங்கள் அலறிக் கொண்டிருந்தன. நடு வீதிக்குவந்திருந்தன.
"பறக்கும் ரயில் வரப்போகுதாம். இந்த வழியாத்தான், டபுள் ட்ராக் போகுதாம். கவர்மென்ட்உத்தரவு!' என்று சொன்னார்கள்.
மானுடத்தின் விடிவிற்காக வந்த மரங்கள் வெட்டப்பட்டுக் கிடப்பதைப் பார்க்க சகிக்கவில்லை. தினக்கூலி நாற்பதோ, அறுபதோ பெற்று, அன்றாட உழைப்பாளியாக, வாழ்வின் விளிம்புநிலையில் நிற்கும் மனிதர்களை, இன்னும் 30 கி.மீ., தள்ளி குடியமர்த்த நினைக்கும் அரசின்திட்டத்தை கேட்க சகிக்கவில்லை.
பாறையாக கனத்துப்போன நெஞ்சுடன் வீடு வந்து சேர்ந்தபோது, அப்பா கூடலூரிலிருந்துவந்திருந்தார்.
தலையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.
லாப்டாப்பில், ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் பற்றி எதையோ ஆராய்ந்து கொண்டிருந்ததீபக்கிடம், காபியை நீட்டினேன்.
""அப்பா போன் பண்ணினாரா?''
""ஆமாம்மா... காம்ப் நாளைக்கு முடிஞ்சு, நாளை நைட் புறப்படறாராம்...''
""சாப்பிட்டியாப்பா?''
""யெஸ்மா... மாங்காய் பருப்பும், காரட் சாலட்டும் பிரமாதம்... தாத்தா வந்தாச்சு... பாத்தியா?'' என்றான்.
""பாத்தேன். முகம் சரியா இல்லே... பயணக் களைப்பா இருக்கும்... உனக்கு மெயில் வந்துதா? ..எம்., ஆமதாபாத் என்ன சொல்றான்?'' என்று, டம்ளரை வாங்கிக் கொண்டேன்.
""ஆமதாபாத், கோல்கட்டா, பெங்களூரு மூணுமே, மெயில் மேல மெயில் அனுப்பிட்டுதான்இருக்கும்மா... எனக்குதான் கொஞ்சம் குழப்பம்...''
""குழப்பமா... ஏன்? என்ன குழப்பம்?'' என்று அப்பா வந்தார்.
""..டி., டாப் டென்ல இவன் ஒருத்தன்பா... இவன் கேட்கிற குரூப்புக்கு, லேப் பெசிலிட்டி, இந்த மூணுல எதுல நல்லா இருக்குன்னு பார்க்க வேண்டாமா? அதுசரி... டூர் எப்படி இருந்தது? சரியா சாப்பிடலையா? சித்தி எப்படி இருக்கா?'' என்று அவர் கையிலும் காபியை வைத்தேன்.
""தீபக்...'' என்றார் அழுத்தமாக அவனைப் பார்த்து.
""என்ன தாத்தா?''
""இந்த தேசமே வேண்டாம்ப்பா... ..எம்., - எம்..டி.,ன்னு போட்டு குழப்பிக்காதே... உன்மார்க்குக்கு, ஸ்டான் போர்டே கிடைக்கும்பா... லண்டன், அமெரிக்கான்னு போயிடு... இதுநாசமாப் போன சிஸ்டம்... வேண்டாம்பா...'' என்றார். சடாரென்று முகம் வெந்து, உதடுகள்துடித்தன.
""நானும் அப்படித்தான் நினைக்கிறேன்...'' என்றேன் கவலையுடன்.
""என்னம்மா சொல்றே?'' என்று அவன் குழப்பத்துடன் பார்த்தான்.
""மொதல்ல தாத்தா சொல்லட்டும்...''
""ஊட்டி...'' என்றார்; கண நேரத்தில் கண்கள் கலங்கி விட்டன.
அவரையே பார்த்தேன்... தீபக் எழுந்து வந்தான்.
""ஊட்டி, கூடலூர் எல்லைப் பகுதியில இருக்கிற வீட்டைப் பாக்கத்தான் போனேன். பூர்வீக வீடு; என் தாத்தா கட்டின வீடு. பாட்டி, கன்றும், மாடும் வெச்சு வளர்த்த வீடு. அப்பா அதை கோவில்மாதிரி பாதுகாத்தார். சர்ச் பக்கத்து ஏழைக் குழந்தைகளுக்கு, அந்த வீட்டுலதான் இலவசப் பாடம்எடுத்தார். அம்மா, ஏழைகளுக்காகவே பயிர் பண்ணி, சகாய விலைக்கு கொடுத்தாள். என் கைக்குஅந்த வீடு வந்தபோது, இலவச லைப்ரரியா மாத்தினேன்... தெரியுமில்லையா?'' என்றார்.
""தெரியாம என்ன தாத்தா?'' என்று தீபக் அவர் கையைப் பற்றினான். ""ரெண்டு மாசத்துக்கு ஒருதடவை, மன நிறைவோட போய் அந்த வீட்டைப் பாத்துட்டு வருவீங்களே... பத்துபுஸ்தகமாவது புதுசா கொண்டு போய் சேர்ப்பீங்களே...''
""இனிமே எதுவும் இல்லடா தீபக்...'' என்று, அவன் கைகளில் முகம் பற்றி அழுது விட்டார்.
""ஆயிரம் அடி உயரத்துல இருந்து சரிந்த மண்ணும், பாறையும், வழியில் கிடைச்சதை எல்லாம்வழிச்சு எடுத்திருக்கு. நானூறு இடங்கள்ல நிலச்சரிவுகள். விடாமல் அடிச்ச பெருமழை மட்டுமாகாரணம்? இல்லப்பா... மனிதன் செஞ்ச குற்றங்கள்... மழை, வெள்ளத்தை, எந்தத் தடையும்இல்லாம அதன் போக்குலயே விட்டிருந்தா பிரச்னை இல்லையே...
"" தண்ணி போகிற பாதை முழுக்க, எக்கச்சக்க வீடுகள், காட்டேஜ்கள், உணவு விடுதிகள், ஓட்டல்கள்ன்னு ஆக்கிரமிச்சிருக்கு. தடுப்புகள் இருக்கும்போது, தண்ணீர் எப்படி வழிந்து ஓடும்? தேங்கி மண்ணுக்குள் இறங்கும். மெல்ல சகதி ஆகிடும். மறுபடி, மறுபடி, தேங்கி, மண்அரிக்கப்பட்டு, பிடிமானம் இளகி நிலம் சரிஞ்சுது.
""காளான்களாக, கல்குவாரி முளைசிருக்கு. போதாதற்கு, சட்டத்திற்கு புறம்பா மலைகளைவெட்டித் தள்ளுறது, நீலகிரி முழுக்க நடக்குது. நம்ம வீடு, பூமிக்குள்ள புதைஞ்சு போச்சுசியாமளா...'' சிறுவனைப் போல விம்மல் தெறித்து அழுதார் அப்பா.
""சரிப்பா... ப்ளீஸ்... அழாதீங்க... நீங்க சொன்னது போல, மனிதத் தன்மை இல்லாம, ஏன், ஜீவகாருண்யம் இல்லாம, குறைஞ்சபட்ச சுற்றுச்சூழல் உணர்வு கூட இல்லாத இயந்திரஉலகத்துல வாழ றோம்பா... வேற என்ன வழி இருக்கு நமக்கு, இதுல இருந்து தப்பிச்சு போகிறதுக்கு?'' என்று கரகரத்தேன்.
""தீபக்குக்கு இருக்கே... அவன் தப்பிக் கலாமே... இந்த நாடும் வேண்டாம்; ஜனங்களும்வேண்டாம்டா தீபக். நீ அமெரிக்கா போ... உன் திறமையும், புத்திசாலித் தனமும், இந்ததேசத்துக்கு பயன்படக் கூடாது. நன்றி கெட்ட மிருகங்கள். தீபக்! நீ கிளம்புப்பா...'' என்று அப்பாகர்ஜித்தார்.
ஊமை அழுகையாக மனது கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தது. ரோஜாவை அரைத்து குல்கந்துசெய்யும் உலகம் இது என்று விம்மிக் கொண்டிருந்தது.
""என்னம்மா... நீயும் பாக்கலே, நானும் பாக்கலே... ஊட்டுல என் பொண்ணுதான் எண்ணிப்பாத்து சொல்லிச்சு... பாரு, ரெண்டு நோட்டு கூடுதலா கொடுத்திருக்கே...'' என்று தேவானைவந்து நீட்டினாள்.
காலையில் அவளுக்கு, ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்திருந்தேன். எண்ணிக்கொடுக்கவில்லையா?
""சார்... நடேசன் சார்...'' என்று யாரோ அழைக்க, வாசலுக்கு சென்றாள்.
மெலிந்த உருவம். ஐம்பது வயது மதிக்கலாம் போன்றவர். முகத்தில் இவ்வளவு வலி ஏன் என்றுதெரியவில்லை.
""என் பேர் வரதன்... பெரியவர் இருக்காரா?'' என்றார்.
""உட்காருங்கள். இதோ கூப்பிடறேன்...'' என்று, உள்ளே போய் அப்பாவிடம் சொன்னேன்.
""வரதனா... யாரது? அந்த பெயர் நினைவில் இல்லையே?'' என்றபடி அப்பா வந்தார்.
உட்கார்ந்திருந்தவரை ஒரு நிமிடம் பார்த்து, ஞாபகத்திற்கு கொண்டு வந்து விட்டார்.
""வாங்க... வாங்க... பெண்ணுக்கு ஆபரேஷன் முடிஞ்சுதா? நல்லா இருக்காளா?'' என்றுபுன்னகைத்தார்.
வந்தவர் முகத்தில் புன்னகை தோன்றவில்லை. தலை மெல்ல குனிந்து நிமிர்ந்தது; உதடுகள் ஒருநிமிடம் துடித்தன.
சட்டைப் பைக்குள் கைவிட்டு, ஆயிரம் ரூபாய் தாளை எடுத்தார்.
""என் மகள் சாந்திக்கு, இதய ஆபரேஷன் செய்ய என்னிடம் பணமில்லை. உங்களை மாதிரி ஈரமனசுக்காரர்கள்கிட்ட மடிப்பிச்சை கேட்டு, லட்ச ரூபாய் சேர்த்து அவளை ஆஸ்பத்திரிக்குகொண்டு போனேன். போகிற வழியிலேயே அவள் போயிட்டாள் சார். இந்த பணத்திற்குதேவையே இல்லாமல் போய் விட்டது. யார்கிட்டே, எவ்வளவு வாங்கினேன்னு, பேர், அட்ரசோட எழுதி வெச்சிருக்கேன். இது, நீங்க கொடுத்த ஆயிரம் ரூபாய் சார்... உங்க நல்லமனசுக்கு நன்றி. அம்மா, பெரியவரை நல்லபடியா பாத்துக்குங்க... வரேன் சார்...''
கையெடுத்து கும்பிட்டார்.
அப்பாவும், நானும் விக்கித்து நின்றோம்.
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம்.
""ஆமதாபாத் பெஸ்ட்டுன்னு ரகு சொல்றாம்மா... அங்கயே படிக்கிறேன்...'' என்று தீபக் வந்துநின்றான்.
கதவைத் திறந்து, போனவரையே பார்த்துவிட்டு எங்கள் பக்கம் திரும்பினான்.
""எல்லா ஊர்கள்லயும், எல்லா தேசத்துலயும், நல்லதும் உண்டு; கெட்டதும் உண்டு தாத்தா... நம்ம ஊர் சிஸ்டம், நியாயத்தின் பேர்லயும், தர்மத்தின் பேர்லயும் உண்டாக்கப்பட்டது தான். ஆனா, அதை கண்காணிக்க வேண்டிய மனிதர்கள் குறைபாட்டோட இருக்கிறதால, எல்லாம்பாழாகிட்டிருக்கு...
""ஆனால், எல்லாரும் அப்படி இல்லே தாத்தா... தர்மபுத்திரர்களும், பீஷ்மர்களும் உங்கவடிவுல, இதோ வந்துட்டுப் போறாரே இவர் வடிவுல வாழ்ந்துகிட்டுதான் இருக்காங்க... அமெரிக்கா, லண்டன்ல மட்டும் குற்றங்கள், குறைகள் இல்லையா தாத்தா? வியட்னாம், கியூபா, ஈரான், ஈராக், ஆப்கன்னு, நாடு நாடா ஊடுருவி, ஆயுதங்கள், ஆயில்ன்னு அமெரிக்கா வம்புச்சண்டைக்கு அலையலையா?
""ஸ்கூல் பையன்கள்ல முக்கால்வாசி பேர், துப்பாக்கிகளோட அமெரிக்காவுல சுத்தறதில்லையா? வாட்டர்கேட் ஊழல், மோனிகா லெவன்ஸ்கின்னு வெள்ளை மாளிகை களங்கப்படலையா? லண்டன் அரண்மனை, எத்தனை நாடுகள்ல காலனி அமைச்சது? நம்மளையே, நானூறு வருஷம்அடிமைப்படுத்தி வெக்கலையா? தாத்தா... நம்பிக்கையோட இருக்கலாம்... நாம நல்லவர்களாஇருப்போம் தாத்தா... சூழலையும் நல்லதா ஆக்குவோம்... காலப்போக்குல எல்லாமே கம்பீரமாநிமிர்ந்து நிற்கும் தாத்தா...''
தீபக்கை, அப்பா கண்ணீருடன் அணைத்து, சம்மதத்துடன் தலையாட்டினார்.
அந்தக் காட்சியை மறைத்து விடக்கூடாதே என்று, என் கண்ணின் ஈரத்தை வேகமாக துடைத்தேன்நான்.